எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி உறுதி
புதுதில்லி, டிச. 31 - நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை உள்ள தாகவும், எதிர்க்கட்சிகள் மிகுந்த வலிமையுடன் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் பாஜக-வை அகற்ற முடியும் என்றும் காங்கிரஸ் எம்பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற பெயரில், கடந்த 108 நாட்களாக 9 மாநிலங்க ளில் சுமார் 2800 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, ஜனவரி 2 முதல் மேலும் 3 மாநிலங்க ளில் நடைபயணத்தை துவங்க இருக்கிறார். இதனிடையே, செய்தியாளர் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி, தனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது, செய்தியா ளர்களின் பல்வேறு கேள்விகள், பாஜக-வின் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் முதன்மை நோக்கமே வெறுப்புக்கு எதிராக தேசத்தை இணைப்பதுதான். எங்களைப் பொறுத்தவரை இந்த நடைபயணம் வெற்றிகர மான ஒன்றாகும். இதன்மூலம் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதைக் காண முடிந்தது. நாட்டில் பாஜகவுக்கு மிகப் பெரிய எதிர்ப்பலை உள்ளது. எனவே, பாஜகவுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுடன் எதிர்க்கட்சிகள் வலிமையாக ஒன்றிணைய வேண்டும். இந்திய ஒற்றுமைப் பயணம் அனைவருக்கும் பொதுவானது. பாரத் ஜோடோ யாத்திரையின் கதவுகள் அனை வருக்காகவும் திறந்துள்ளன. எங்களுடன் இணையும் யாரையும் நாங்கள் தடுக்க மாட்டோம். அதில் யார் கலந்து கொள்கிறார்கள், கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது. இந்த நடைபயணத்தில் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் இணைந்திருந்த னர். பொதுவாகவே அன்புக்கும் வெறுப்புக்கும் நிறைய இடைவெளியும், வேறுபாடும் இருக்கி றது. ஆனாலும் பலர் அன்பை பரப்பவே நினைக் கின்றனர். ஆனாலும், சில அரசியல் நிர்ப்பந்தங் கள் இருக்கின்றன என்பதை நான் உணர்கி றேன். அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டவர்கள் ‘அன்பின் இந்தியா’வை விரும்புகின்றனர். கொள்கை ரீதியாக எங்களுடன் அவர்களுக்கு உறவு உள்ளது. அகிலேஷ் ஜியும், மாயாவதிஜி யும் வெறுப்பை விரும்ப மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் சுதந்திரமாக இருப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும்.'
எனது பயணத்திற்கு எதிராக பாஜக பல பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. நடை பயணத்தின்போது, பாதுகாப்பு விதிமுறை களை மீறியதாக தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினரைக் கூறவைத்து, எந்த காரணமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக அரசு முயற்சி செய்கிறது. கொரோனாவை காரணம் காட்டி நடைபயணத்தை நிறுத்த முயற்சி செய்கிறது. புல்லட் புரூப் வாகனத்தில் செல்லும்படி உள்துறை அமைச்சகம் கூறுகிறது. நடைபயணம் எனும்போது, நடந்து தான் செல்ல முடியும். குண்டு துளைக்காத காரில் நடைபயணம் செல்ல முடியாது. பாது காப்புக்கு என்ன செய்ய வேண்டும் என அவர் களுக்கு தெரியும். ஆனால், இதனை பிரச்சனை ஆக்குகிறார்கள். நான் அணியும் ‘டீ-சர்ட்’டை வைத்தும் அதிகளவு சர்ச்சையை ஏற்படுத்து கிறார்கள். குளிர்காலம் கண்டு பயம் இல்லாத தால், நான் ஸ்வெட்டர் அணிவது கிடையாது. குளிரை உணரும் போது ஸ்வெட்டர் அணியப் போகிறேன். இதில் விவாதிக்க வேறு என்ன இருக்கிறது? ஆனால், அவர்களால் உண்மை யுடன் போராட முடியாது. அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. அதை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? உண்மையுடன் போராட முடியாது. நான் இந்த யாத்திரையை எந்த முன்முடிவும் இல்லாமல் தொடங்கினேன். இந்தப் பயணத்தில் நான் நிறைய விஷயங் களைக் கற்றுக்கொண்டுள்ளேன். பாஜக, ஆர்எஸ்எஸ் இன்னும் வலிமையாக எங்களைத் தாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது, காங்கிரஸ் கட்சியின் சித் தாந்தங்களைப் புரிந்து கொள்ள உதவும். நான் அவர்களை எனது ஆசிரியர்களாக கருது கிறேன். நான் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை எனக்கு உணர்த்தி, அதற்கான பாதையை அவர்கள் காட்டியுள்ள னர். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.