சென்னை, மே 28- சென்னை ஸ்டான்லி,தருமபுரி,திருச்சி அரசு மருத்துவகல்லூரிகளின் அங்கீ காரத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்து வக்கல்லூரி மற்றும் திருச்சி, தருமபுரி யிலுள்ள அரசு மருத்துவ க்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்நடவ டிக்கையால் இந்த 3 கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவக்கல்விக் கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது பேராசிரியர் மற்றும் மாணவர்களின் ஆதாரு டன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.