பெங்களூரு, செப். 29- முழுஅடைப்பு போராட்டத்தின் பொழுது பர்தா அணிந்து போராடிய வாட் டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து 2000-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் கர்நாடக மாநிலம் முழு வதும் வெள்ளியன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். பெங்களூரில் பிரச்சனை இல்லை பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு நிலுவையில் இருந்ததால் அங்கு முழுஅடைப்பு போராட்டம் பெரியளவில் அரங்கேறவில்லை. எனினும் பெங்களூ ரில் இருந்து புறநகர் மற்றும் சில பகுதி களுக்கு பேருந்துகளும் ஓடவில்லை. வாட்டாள் நாகராஜ் கைது முழுஅடைப்பு போராட்டத்தின் பொழுது பெங்களூரில் கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாக ராஜ் குயுக்தியாக பர்தா அணிந்து போராட்டம் நடத்தினார். அவரை போலீ சார் கைது செய்தனர். வாட்டாள் நாக ராஜின் செயல்பாடு கடும் அதிர்வலை யை ஏற்படுத்தியுள்ளது. முழுஅடைப்பு போராட்டம் மூலம் மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவா இல்லை, வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.