states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை

தருமபுரி,ஆக.6- 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி மேட்டு புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. அவரது மகன் முபாரக் (26). இவர் தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி யாற்றி வந்தார். அந்த பள்ளியில் பயின்று  வந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 21.4.2022  இல் பாலியல் தொல்லை கொடுத்துள் ளார்.  இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக, தருமபுரி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிந்த  நிலையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி  பர்கதுல்லா, “தனியார் பள்ளி ஆசிரியர்  முபாரக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை  தண் டனை விதித்தார். இதைத்தொடர்ந்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை, ஆக.6- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் வலது கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பலி யானது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த தஸ்தகீர்  என்பவரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால்  பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன. தலையில் இருக்கும் நீரை வெளியேற் றும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெற்றோர் குழந்தையை அனுமதித்தனர். அப்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் திரவ உணவை செலுத்துவதற்காக வலது கையில் ஊசியை பொருத்தினர். இதில்  ரத்த ஓட்டம் தடைபட்டு கருஞ்சிவப்பாக மாறிய குழந்தையின் வலது கையை  மருத்துவர்கள் அகற்றினர். மருத்து வர்களின் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட தாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்ட விசா ரணை குழு நடத்திய பரிசோதனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஞாயிறன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வெடி விபத்து:  ஒன்றிய அரசு  அதிகாரிகள் விசாரணை

கிருஷ்ணகிரி, ஆக.6- கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி பட்டாசு குடோன் வெடி  விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர்  காயமடைந்தனர். இதில், பட்டாசு விபத் துக்கு அருகில் இருந்த ஓட்டலில் கேஸ்  சிலிண்டர் வெடித்த காரணம் என மாவட்ட  நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது கூறினார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடி  விபத்தில் பலியான ஓட்டல் உரிமை யாளர் ராஜேஸ்வரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இந்த நிலையில், ஒன்றிய பெட்ரோலி யம், வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறு வன அதிகாரிகளின் விசாரணை  கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, ஆக.6- தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம், திருச்சி, சிவ கங்கை, மயிலாடுதுறை மாவட்ட  எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். மதுரை அமலாக்கத்துறை எஸ்.பி.யாக இருந்த வருண்குமார் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியம னம் செய்யப்பட்டுள்ளார். பொரு ளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அன்கிட் சென்னை தி.நகர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். தி.நகர் உதவி ஆணையராக இருந்த  அருண் கபிலன் சேலம் மாவட்ட  எஸ்.பி.யாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். சேலம் மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்கு வரத்து உதவி ஆணையர் சக்தி வேல் வண்ணாரப்பேட்டை உதவி  ஆணையராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து கிரிதி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் பராக்கர் ஆற்றின் பாலத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘அமித் ஷாவை சந்திக்கவில்லை, தகவல்கள் போலியானவை’

தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் அமித் ஷாவை சந்தித்து அஜித் பவார் தலைமையிலான அணியில்  இணைந்ததாக செய்திகள் வெளியாகியன. இந்த செய்திகள் பொய்யானவை என ஜெயந்த் பாட்டீல் கூறி யுள்ளார். “இது உண்மையல்ல. அமித்ஷாவை நான் சந்தித்த தாக யார் சொன்னது?.இதையெல்லாம் சொல்பவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். சனியன்று மாலை நான் சரத் பவார் இல்லத்தில் இருந்தேன்” என அவர் கூறியுள்ளார்.

 ‘எதிர்க்கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்’

“ராகுல் காந்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முடிவை வரவேற்கிறோம். இது ஒரு வரலாற்று  நாள். உண்மைக்கு போராடுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.  ராகுல் காந்தி மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சித் தலை வர்களும் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள்” என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதமர் ஏன் ஓடுகிறார்?

“பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களுக்கு பயந்து ஏன் ஓடுகிறார்? எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை பிரதமரால் ஓருபோதும் சமாளிக்க முடியாது”  என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்த அவலம்

லக்னோ, ஆக.6- பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில்  10 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை  திருட்டு சந்தேகத்தின் பேரில் பிடித்து, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிறுநீர் குடிக்க வைத்தனர். மேலும், அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.  ஆகஸ்ட் 4 அன்று நடந்த இந்த கொடுமையின் வீடியோ  சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சித்தார்த்நகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

508 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம் துவக்கம்

புதுதில்லி, ஆக.6- நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று துவக்கி வைத்தார். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களை புதுப்பிக்க ஒன்றிய அரசு அமிர்த பாரத நிலையம் எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை  புதுப்பிக்கும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள 1,300 முக்கிய ரயில் நிலையங்கள் அமிர்த பாரத ரயில் நிலையங்களாக மறுசீரமைக்கப்பட உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களுக்கான மறுசீரமைப்புப் பணிகள் இன்று தொடங்குகின்றன.  இதன்மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும். ரயில் நிலையங்கள் எளிய மக்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும்’’ என்றார். ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் சிட்டி சென்ட்டர் போல மேம்படுத்தப்படும் என்றும், ரயில் நிலையத்தின் கட்டிடம் தரம் உயர்த்தப்படும் என்றும், வணிக மண்டலம், உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு இட வசதிகள் ஆகியவை இந்த மறுசீரமைப்பு ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தீக்கதிர் முக்கிய செய்திகள் 
 

ஹரியானா மாநிலத்தின் கலவரம் நடைபெறும் முக்கிய பகுதியான குரு கிராமில், வன்முறைக்கு இடையே திக்ரா கிராமத் தில் இந்துத்துவா அமை ப்புகள் ஒன்றிணைந்து ஞாயிறன்று மகாபஞ்சா யத்து கூட்டம் நடத்தி யது. இந்த மகா பஞ்சாய த்து கூட்டத்தில் திக்ரா கிராமத்தில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம, நகர பகுதி களில் இருந்தும் மக்கள் கூட்டத்திற்காக அழை த்து வரப்பட்டிருந்தனர். இந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தால்  குருகிரா மில் மேலும் பதற்றமானச் சூழல் உருவாகியுள்ளது.

அனைத்து கலைக் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டத் தை அமல்படுத்தும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை முடிவுக்கு கல்வி யாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர்கல்வித்துறையின் முடிவால் தன்னாட்சி அதி காரம் பெற்ற கல்லூரி கள் கடுமையாக பாதிக் கப்படும் எனவும், 75ரூ வரை ஒரே பாடத்திட்டம் என்ற முடிவு வேலை வாய்ப்புக்கு ஏற்ற கற்பித்த லை பாதிக்கும் என கல்வி யாளர்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆர ணியாற்றின் ஆலாடு பகு தியில் உள்ள அணைக் கட்டில் 5 கிலோ எடை யுள்ள மீனாட்சி அம்மன் ஒரு அடி உயரமுள்ள ஐம் பொன் சிலை கண்டெ டுக்கப்பட்டுள்ளது.  ஆரணியாற்றில் மக்கள் குளித்தபோது கிடைத்த சிலையை கண்டெடுத்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கிண்டி பரங்கி மலை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் காரணமாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.