புதுச்சேரி, மே 11- புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார். ஆனால் தற்போது பிரதமர் மோடி கூறியதுபோல் புதுச்சேரியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அண்மையில் புதுச்சேரி வந்தி ருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் நேரத்தில் பிர தமர் கூறியவாறு ‘பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிவிட்டு தான் அடுத்தமுறை தேர்தலுக்கு உங்களை சந்திக்க வருவோம்’ என அவரும் கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்தி ருந்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனிடம், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்று வோம் என கூறிய வாக்குறுதி எந்த நிலையில் உள்ளது என செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பெஸ்ட் புதுச்சேரி என்று சொன்ன வர்கள் அதை மறந்துவிட்டு சென்று விட்டார்கள் என பதிலளித்தார். கடந்த காலத்தில் யாரோ ஒரு தலைவர் கூறியதைதான் பத்திரி கையாளர்கள் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு முருகன் இப்படி உளறிவிட்டார் என்று பாஜகவினர் நொந்து கொண்டனர். எல்.முருகனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலச லப்பை ஏற்படுத்தியது. புச்சேரி யில் என்.ஆர்.காங்கிரஸூடன் கூட்ட ணியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.கவின் ஒன்றிய இணை அமைச்சரே இப்படி கூறியிருப்பது, புதுச்சேரி மக்கள் மீதான அவர்களின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி என்ற திட்டத்தை கூட இணையமைச்சராக இருக்கக் கூடிய எல்.முருகன் நினைவில் வைத்திருக்கவில்லையே என்று என்.ஆர்.காங்கிரஸ் தலை வர்களும் புலம்பி வருகிறார்கள்.