நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி, தில்லி சாந்தி வனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். முன்ன தாக மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது வளர்ச்சிகர எண்ணங்கள், சவாலான சூழலிலும் சமூக, அர சியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. ஜனநாயகத்தின் சாம்பியன். உண்மை யான தேசப்பற்றாளருக்கு எனது பணிவான அஞ்சலி” என்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.