திராட்சைத் தோட்டம் அடைந்த நரிக்கு
திராட்சைக் கொத்தை எட்டிப் பறித்து
திராட்சையை உண்ண இயன்றிட வில்லை
எவ்வளவு முயன்றும் முடியாத நிலையில்
“திராட்சை புளிக்கும் சீச்சீ வேண்டாம்”
தாய்நரி வார்த்தை நினைவில் வந்தது
ஆயினும் பசியில் வேகம் கொண்டு
சுற்று முற்றும் பார்வையைச் சுழற்ற
தோட்டத்தில் தடியொன்று காணக் கிடைத்தது
சட்டென எடுத்து திராட்சைக் கொத்தை
நோக்கி அடிக்க வீழ்ந்தது திராட்சை
புளிக்காத திராட்சையை உண்டு மகிழ்ந்தது
முடியாது என்ற முடிவுக்குச் சென்றால்
முடியாத தாகவே ஆகும் என்பதும்
முடியும் என்னும் நம்பிக்கை பிறந்தால்
வெற்றி கிடைக்கும் என்பது அனுபவம்