states

புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்!

சென்னை, ஜூன் 10- உணவுப் பொருள் பெறுவதற்கு மட்டுமின்றி அரசின் பல்வேறு பொருட்கள், சலுகைகள் ஆகிய வற்றை பெறுவதற்கும் ரேசன் கார்டு கள் முக்கிய அடையாளமாக உள் ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் குடும்ப அட்டைகள் அனைத்தும் ‘ஸ்மார்ட் கார்டு’களாக மாற்றி வழங்கப்பட்டன. அதாவது ஆதார்  மற்றும் செல்போன் எண் இணைக்  கப்பட்டு இந்த ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்பட்டன. இதற்கிடையில் மகளிர் உரி மைத்தொகை திட்டம் செயல்பாட் டுக்கு வந்த வேளையில் ஒரே குடும்  பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங் கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத் தப்பட்டன. அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி  நடந்தது. தற்போது சுமார் 2 லட்சத்து 40  ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்  டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப் படவில்லை. இந்த நிலையில் சில ருக்கு ‘உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு  ஒப்புதல் ஆகிவிட்டது’ என்ற குறுஞ்  செய்தி வந்தது. அவர்களுக்கு கார்டு கள் வழங்கவிருந்த நிலையில் நாடா ளுமன்ற தேர்தல் தொடங்கியது. எனவே அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. தற்போது மக்களவைத் தேர்தல்  முடிந்த நிலையில் புதிய ரேசன் அட்டை வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித் துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர் என்றும், மேலும் புதிதாக 2 லட்சம் புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி களும் நடைபெற்று வருவதாகவும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.