புதுதில்லி, ஏப். 3 - ஒன்றிய பாஜக அரசானது, விசார ணை முகமைகளை அரசியல் பழி வாங்கலுக்குப் பயன்படுத்துவதாக 14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு, புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஒன்றிய பாஜக அரசானது, வரு மான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங் களுக்காக தவறாக பயன்படுத்துவ தாகக் கூறி, 14 எதிர்க்கட்சிகள், கடந்த மார்ச் 24 அன்று உச்ச நீதிமன்றத்தை நாடின. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த அந்த மனுவில், “வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக-வுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறி வைத்து செயல்படுவதாகவும், பாஜக- வில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகிறது அல்லது முடித்து வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தன.
இந்த விவகாரத்தில், புலனாய்வு அமைப்புகள் கைது நடவடிக்கைக்கு முன்னதாகவும், கைதுக்குப் பின்னரும் மேற்கொள்ளும் வழிகாட்டுதல் நட வடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தன. எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இந்த மனுவினைத் தாக்கல் செய்திருந் தார். அப்போது, இந்த மனுவை, இரண்டு வாரங்களில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தெரிவித்திருந்தார். அதன்படி, மத்திய விசார ணை அமைப்புகள் தவறாக பயன் படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட உள்ளதாக உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வே வழக்கை விசாரிக்க உள்ளதாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.