states

ஆர்எஸ்எஸ் கூட்டமே நடக்கவில்லையாம்: பள்ளி நிர்வாகம் அபாண்டம் !

சென்னை, நவ. 30 - தமிழக அரசின் தடையை மீறி சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவ.26-27 தேதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையில் கூட்டம் நடந்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நவ.28 அன்று பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஜெய கோபால் கரோடியா பள்ளிக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்கு பள்ளி நிர்வாகம், இது போன்ற கூட்டம் தங்கள் பள்ளியில் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்.