ஊட்டி, மே 25 - இயற்கை எழில் மிகுந்த நீல கிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதி கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்ற னர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் கண்காட்சி நடத்தப் படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. முக்கிய நிகழ் வான மலர் கண்காட்சி கடந்த 20 ஆம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்கியது. மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் கண்டு கழிப்பதற்கு வசதியாக பல வண்ண மலர்களை கொண்டு வேளாண்மை பல்கலைக்கழக மாதிரி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 வாசகம், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் பொம்மைகளும் காட்சி படுத்தப்பட்டிருந்தது
. இதுதவிர நீலகிரி மாவட்டத் தில் வாழும் 6 பழங்குடியினர்க ளின் உருவ அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. இதனை சுற்றுலா பயணி கள் குடும்பத்துடன் கண்டு களித்து மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 5 நாட்களில் கண்காட் சியை காண தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இது வரைக்கும் 1 லட்சத்து 13 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். இறுதிநாளான மே 24 அன்று நடந்த நிகழ்ச் சிக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி னார். விழாவில் சிறந்த பூங்கா வாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி தேர்வு செய்யப் பட்டு கவர்னர் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இதனை ராணுவ கல்லூரி அதிகாரி அனு ராக் அத்வால் பெற்று கொண்டார். சிறந்த மலருக்கான முதலமைச்ச ரின் சுழல்கோப்பை ஊட்டி தலை யாட்டி மந்துவை சேர்ந்த ஜான்சி கிசோருக்கு வழங்கப்பட்டது.