states

அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 800 கிலோ கடல்பசு மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டது

தஞ்சாவூர், நவ.10 -  கீழத்தோட்டத்தில் மீனவர்கள் வலை யில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கீழத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீன வர்கள் ஞாயிறன்று அதிகாலை கடலுக்குள்  மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீன வர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது.  உடனே அந்த கடல் பசுவை கண்ட  மீனவர்கள், இதுகுறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வனவர் சிவசங்கர் மற்றும் வனத்துறை யினர் கீழத்தோட்டத்திற்கு விரைந்து சென்றனர்.  பின்னர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் பேரில், மீன வர்களுக்கு ஆலோசனையும், அறிவுரை யும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  மீனவர்கள் வனத்துறையினரின் அறிவு றுத்தலின்பேரில் மீண்டும் நல்ல நிலை யில் கடலுக்குள் கடல் பசுவை விட்டனர்.  கடல்பசுவை மீட்டு உயிருடன் விட்ட  மீனவர்களுக்கு பட்டுக்கோட்டை வனச்சரக  அலுவலர் சந்திரசேகரன், சந்தன மாலை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், வனத்துறையினர் சார்பில் விரை வில் விழா நடத்தி மீனவர்கள் கவுரவிக்கப் படுவார்கள் எனவும், ரொக்கப்பரிசு வழங்கப் படும் எனவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.