சென்னை,செப்.22- ஆளுநர் விரைந்து சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன், “இந்திய மருத்துவ முறைகளான ஆயுர் வேதா, ஹோமியோபதி, யுனானி மற்றும் யோகா ஆகியவற்றோடு இணைந்து சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றும் தமிழ கத்தில் அமைக்க அறிவிக்கை வெளியிடப் பட்டது. அதன்படி, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு 2022 ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் ஒப்புதலும் பெறப்பட் டது. அதன் பிறகு, மே மாதத்தில் சட்டத்துறை மூலமாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது”என்றார். சட்டத்துறைக்கு அனுப்பிய கடிதத்திற்கு 25.7.2022 அன்று ஆளுநரின் முதன்மைச் செய லாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த மசோதா வில் மாணவர்களின் சேர்க்கை சம்பந்தப் பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ தேசிய ஆணையச் சட்டம் 2020 இல் உள்ள சட்டப் பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்கும்படி கேட்டி ருந்தார். இதற்கு அரசு சார்பில் அளித்த பதிலில், முரண்பாடு ஏதும் இல்லை என விரிவான விளக்கங்களுடன் ஆளுநரின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக் கிறோம். எனவே, தமிழகத்தில் விரைந்து உரு வாக இருக்கிற சித்த மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.