states

img

காலை உணவுத் திட்டம்: தெலுங்கானா அரசு அதிகாரிகள் ஆர்வம்

சென்னை, ஆக. 31- தமிழ்நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் செயல் பாடுகள், அதன் பலன்கள் குறித்து தெலுங்கானா அரசு அதிகாரிகள் தமிழகம் வந்து கேட்டறிந்தனர். பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும், அவர்களது ஊட்டச் சத்தை பேணும் வகை யிலும், இடைநிற்றலை தடுக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் இந்த திட்டம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகை யில் விரிவுபடுத்தப்பட்டது. காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட பல பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்தி ருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்ற னர்.

இந்தச் சூழலில் தமிழகத்தில் இந்த திட்டம் எவ்வாறு செயல் படுத்தப்படுகிறது என்பதை ஆராய தெலுங்கானா அரசு அதிகாரிகள் வருகை தந்தனர். சென்னை ராயபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி உணவு கூடத்தில் உணவு தயாரிப்பு பணிகளை பார்வையிட்டனர். எவ்வாறு சமைக் கின்றனர், உணவின் தரம் எப்படி இருக்கிறது என்பதை கேட்ட றிந்தனர். காலை உணவுத் திட்டத் தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம் பகவத் திட்டத்தின் செயல் பாடு குறித்து தெலுங்கானா அதி காரிகளிடம் விளக்கம் அளித்தார். சென்னை ராயபுரம் அரத்தூண் சாலையில் அமைந்துள்ள மாநக ராட்சி உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறப் பட்டதையும் பார்வையிட்டனர். உணவை ருசிபார்த்த அதிகாரிகள் மாணவர்கள், பணியாளர்கள், பெற்றோர்களிடமும் திட்டம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இளம் பகவத்,  தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை  தெலுங்கானா அரசு அதிகாரி கள் முழுவதுமாக பார்வை யிட்டு அம்மாநில முதல்வரிடம் அறிக்கையளிக்க உள்ளனர். அதே போல் வேறு மாநில அதிகாரிகள் வந்தாலும் அவர்களுக்கும் திட்டத் தின் செயல்பாடு குறித்து விளக்குவோம் என்றார்.