states

டாஸ்மாக் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை: அமைச்சர் பேட்டி

சென்னை,ஜூலை 10- டாஸ்மாக் நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை என அமைச்சர் முத்துசாமி கூறி யுள்ளார். டாஸ்மாக்கின் மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து,  திங்களன்று (ஜூலை 10) சென்னை யில் அமைச்சர் முத்துசாமி தலை மையில் ஆலோசனை நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டும் பார் வைத்திருக்க முடியும். உரிமமின்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளுக்கடை திறப் பது குறித்து ஆய்வு செய்ய குழு  அமைக்க ஆலோசனை நடக்கிறது” என்றார். டாஸ்மாக் நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. காலை 7மணி முதல் 9 மணி வரை  டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை கள் வருகின்றன. டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மக்கள் விரும்புகின்றனர். டெட்ரா பேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் பாட்டில் பயன் பாட்டை குறைக்க முடியும். கண்ணாடி பாட்டில் மது விற்பனை பலருக்கு பிரச்சனையாக உள்ளது.  டெட்ரா பேக்கில் மது கொண்டு  வர முயற்சி செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.

;