states

துறைமுகங்கள் மசோதா ‘மாநில உரிமைகளை பறிக்கும்’: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை,செப்.23- ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும், சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்ற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு (செப். 22) கடிதம் எழுதியுள்ளார். திருத்தப்பட்ட வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா, 2022 மற்றும் அதன் நோக்கத்தின் நீண்டகால தாக்கத்தை மையப்படுத்தவும் மற்றும் ஒழுங்குபடுத்தவும் வேண்டு கிறேன். தற்போது மாநில அரசுக ளால் நிர்வகிக்கப்படும் துறை கடல்சார்  ஒன்றாகும். மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் சில பரிந்துரை களுக்கு இடமளித்தாலும், திருத்தப் பட்ட வரைவு மசோதா, துறைமுகங் கள் உள்ளூர் மற்றும் பிராந்திய அரசாங்கங்களால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன என்ற சர்வதேச  மற்றும் உள்நாட்டு அனுபவத்தை புறக்கணிப்பதாகவே அஞ்சுகிறேன். இந்த வரைவு மசோதா, பெரிய துறைமுகங்கள் அல்லாதவற்றில் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை ஆட்சியை திணிப்பதன் மூலம் அத்தகைய மாநில குறிப்பிட்ட முன் முயற்சிகளை முடக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

மேலும், கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலை சிறு துறை முகங்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றும் முயற்சியில் மிக முக்கியமான மாற்றம் உள்ளது.  இது ஒரு ஆலோசனை அமைப்பாக மட்டுமே உள்ளது. நிரந்தர பணியாளர் களைக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றுவது நிச்சயமாக மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறச் செய்யும். இது சிறு துறை முகங்களின் எதிர்கால வளர்ச்சியை முடக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலைப் போலவே, எம்எஸ்டிசியும் மத்திய மற்றும் கடல்சார் மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களின் அமைச்சர்களுடன் ஒரு ஆலோசனைக் குழுவாக மட்டுமே தொடர வேண்டும். உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பு அழைப் பாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும். கடல்சார் மாநிலங்கள், கடல்சார்  மாநில வாரியங்களின் அதிகாரங் களை ஆக்கிரமிக்கும் வரைவு மசோதா வில் உள்ள மற்ற மையப்படுத்தல் விதி களையும் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும், மாநில கடல்சார் வாரியங்க ளின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு அதிகாரங்கள் தற்போது அந்தந்த மாநில அரசுகளி டம் உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.