states

காசி தமிழ்ச்சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா?

பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தி லும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல.

தமிழக ஆளுநர் ரவி அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவ ருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும்  தொடர்ந்து பேசி வருகிறார். பல்வேறு முக்கிய பிரச்சனைகளில்  தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து ஒன்றிய அரசின்  குரலாக  ஒலித்து வருகிறார். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட வரைவுகளை  முடக்கி வைக்கிறார். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அதனைக் கடு மையாக விமர்சனம் செய்து வந்ததோடு, இனி பொறுப்பதற் கில்லை என்ற சூழலில் குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ள னர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவர் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிபிஎம்  மாநிலக்குழு வலி யுறுத்துகிறது.

சென்னை, நவ.17- காசி தமிழ்ச்சங்கமம் என்ற  பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தி யலை பரப்புவதா என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்  டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்  மானம் வருமாறு: இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர்  16 முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை யில், காசி தமிழ் சங்கமம் என்ற  நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவு சார் மற்றும் கலாச்சாரத்தின் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு-காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு காசி  தமிழ் சங்கமம்” என்று நிகழ்ச்சி  அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார். மாண வர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மீகம், வர்த்தகம், ஆசிரியர்  கள், பாரம்பரியம், தொழில்முனை வோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாச்சாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரயில்களில் மொத்தம் 2,500 பேர் இராமேஸ்வரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

முதல் ரயில் இராமேஸ்வரத்திலிருந்து மாண வர்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 16 அன்று புறப்பட்டுள்ளது. இவர்  கள் தலங்களை சுற்றிப்பார்த்து விட்டு பனாரஸ் இந்து பல்கலைக்  கழகத்தில் நடக்கும் கருத்தரங்கு களில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடு வார்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழ கத்தில் மிக முக்கிய கல்வி நிலை யங்களில் உள்ள மாணவர் மத்தி யில், ஊடுருவும் வகையில் இந்த  நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள் ளது. சென்னை ஐ.ஐ.டி யில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்  படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்வித்துறை அல்  லது தமிழ் வளர்ச்சி மற்றும்  பண்பாட்டு துறை விவாதிக்கப்பட வில்லை. மாநில அரசின் எந்த ஒரு  பங்களிப்பும் இருப்பதாக தெரிய வில்லை. மாநில அரசும் இத்த கைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு  கருத்தும் வெளியிடாதது ஆச்சரி யமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்வித்துறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் இதர ஜனநாயக சக்தி களும் இந்த நிகழ்ச்சி மூலமான பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும்.