சென்னை,நவ.19- தனியார் சர்க்கரை ஆலைகள் லாபப்பங்கை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கில் கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 பிரிவு 5Aபடி லாபப்பங்குத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 98 கோடி ரூபாயை விவ சாயிகளுக்கு வழங்கினர். தனி யார் சர்க்கரை ஆலைகள் தர மறுத்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அனுகியது. சட்டப்படி வழங்க வேண்டிய லாபப்பங்குத் தொகையை தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்கிட வேண்டும் என்று கடந்த 13ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் (சிஸ்மா) சென்னை உயர்நீதி மன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு சிஸ்மா மனுவை தள்ளு படி செய்து, ஏற்கெனவே உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவை செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
ரூ.220 கோடி வழங்க வேண்டும்..
நீதிமன்ற உத்தரவு படி இஐடி பாரி , சக்தி சுகர்ஸ், ராஜஸ்ரீ, தரணி, பண்ணாரி அம்மன், கோத்தாரி, பொன்னி, திருமண்டகுடி ஆரூரான், பெண்ணாடம் அம்பிகா உட்பட 16 தனியார் சர்க்கரை ஆலைகள் 2004-05, 2008-09 ஆண்டுகளில் ஆலைக்கு கரும்பு வழங்கிய விவ சாயிகளுக்கு ரூ.220 கோடி வரை வழங்க வேண்டும். மாநில அரசு, மாநில சர்க்கரை துறை நீதிமன்ற ஆணைப்படி விவ சாயிகளுக்கு விரைவாக பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளுக்காக இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் காஜா நசிமுதீன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாதாடிய வழக்கறி ஞர் எஸ். உதயகுமார் மற்றும் உடனிருந்து உதவிய வழக்கறி ஞர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில், ஒரு லட்சம் கரும்பு விவசாய குடும்பங்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம் என்று டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.