இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஆக.8- சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயி லும் மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடாததால் இறுதியாண்டு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மதிப்பெண் முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க. நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 129-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இதில் 230-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். எழுபதுக்கும் மேற்பட்ட கல்லூரி களில் மே மாதத்திலேயே இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் முடிவடைந்த நிலை யில் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அதற்கான காலவரையறையும் வெளியிடப்படா ததால் மாணவர்கள் மிகுந்த மன அழுத் தத்திற்கு ஆளாகியுள்ளனர் மேலும் சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் சேர்க்கையை துவங்கியுள்ளன. இதனால் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பு பறிபோகிறது. மேலும் படித்து முடித்து வேலை வாய்ப்புகளை நோக்கிச் செல்வதற்கும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியா கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அம் பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 10.08.2023 அன்றோடு விண்ணப்பிப் பதற்கான கடைசி தேதியாக அறி விக்கப்பட்டுள்ளது. சட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுடைய கல்வி வாய்ப்பு என்பது பல்கலைக்கழக தேர்வு முடிவுகளின் தாமதத்தினால் பறிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, விண் ணப்பிக்கவே முடியாத நிலை ஏற் பட்டதால் இளநிலை பட்டப்படிப்பை முடித்த பின்னும் உயர் கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே சென்னை பல்கலைக்கழ கம் தேர்வு முடிவுகளை விரைந்து வெளி யிட வேண்டும். இத்தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை சட்டக் கல்லூரிகள் போன்ற இதர கல்லூரிகளின் விண் ணப்பிப்பதற்கான இறுதி நாளை நீட்டிக்க வேண்டும். இதுபோன்ற குளறுபடிகளினால் பாதிக்கப்படுவது மாணவர்களின் வாழ்க்கையோடு சேர்ந்து பல்க லைக்கழகத்தின் நல்ல பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது. ஆகையால் பல்கலைக்கழகங்கள் இது போன்ற குளறுபடிகளை களைய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நிர்வாகம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.