states

img

ஸ்டான் சுவாமியின் கணினி ஆதாரங்கள் ஹேக்கர்களால்  திணிக்கப்பட்டது -அமெரிக்க தடயவியல் அமைப்பு அறிக்கை

பாஜக அரசினால் பழிவாங்கப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினியில் ஆதாராங்கள் திணிக்கப்பட்டதாக அர்செனல் கன்சல்டிங் தடயவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி (83). திருச்சியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான இவர் பிலிப்பைன்ஸில் சமூகவியல் மேல்படிப்பை முடித்தவர். இந்தியா திரும்பிய இவர் 1975 முதல் 1986 வரை பெங்களூரில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றினார். பழங்குடி ஆலோசனை கவுன்சில் அமைக்க அரசியலமைப்பின் 5வது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்படுத்தாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ச்சியாக பழங்குடி மக்களின் நில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். அந்த மக்களுடனே தங்கி பணியாற்றினார்.

இந்நிலையில் பீமா கோரேகானில் கடந்த 2018ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையே யான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு நடந்த மோதலையடுத்து ஸ்டான் சுவாமி, ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவரராவ், சுதாபரத்வாஜ், கன்சால்வஸ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை பலர் சிறையில் உள்ளனர். 

இதற்கிடையில் ஸ்டான் சுவாமி மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாரீச வாயு நோயால் கடும் பாதிப்புக்கு உள்ளானார். இந்நிலையில் அவர் அதீத கை நடுக்கத்தால் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றும், உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்ஐஏ உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கான அடிப்படை உரிமையை நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து உரிய சிகிச்சை இன்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது ஸ்டான் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டு இருப்பதாக  அமெரிக்க தடயவியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்பட கூடிய அஸ்வெல் கன்சுலேட்டிங் தடயவியல் அளித்துள்ள அறிக்கையில் 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஸ்டான் சுவாமியிள் கணினியை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மாவோயிஸ்ட்களால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டுள்ளது. இதேவழக்கில் சமூக ஆர்வலர்கள் ரோனாவில்சன் கணினியில்  இதுபோன்ற ஆவணங்கள் உட்செலுத்தப்பட்டுள்ளதாக அஸ்வெல் கன்சுலேட்டிங்க வெளியிட்டிருக்குக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.