states

சத்துணவில் தேங்காய் துண்டு: அரசு பரிசீலனை

சென்னை,ஏப்.20- மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் தேங்காய் துண்டு வழங்கு வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (ஏப்.20) கேள்வி நேரத்தின் போது  பேசிய ஜவாஹிருல்லா, “சத்துணவு திட்டத்துக்கு உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி  எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “தமிழகத்தில் உள்ள 43 ஆயிரம்  சத்துணவு மையங்களுக்கு கொண்டைக் கடலை, சத்தான காய்கறிகள் உள்ளிட்ட  சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வரு கிறது. 10 ஆயிரம் மையங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, அவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. உயிர்ம விளை பொருட்களை வழங்கும் திட்டம் தற்போது இல்லை” என்றார்.  துணைக் கேள்வி எழுப்பிய ஜவாஹி ருல்லா சத்துணவு திட்டத்தில் தேங்காய்  துண்டு வழங்க அரசு முன் வருமா? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “தேங்காய் துண்டு வழங்குவது பற்றி அரசு  பரிசீலனை செய்யும்” என்றார்.