மதுரை, ஜூன் 10- கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசும் ஒன்றிய பாஜக அரசும் பின்பற்றிய கொள்கை களால் தமிழகத்தில் ஏராளமான தொழில்கள் மூடப் பட்டுள்ளன. இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக, தென் தமிழகத்தில் பெரும் வேலையிழப்புத் துயரம் ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான அறிக்கை வெளியாகியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம் முடக்கம்
‘தென் தமிழகத்தில் பிரபலமாக கூறப்பட்ட நாங்கு நேரி பல்வகைப் பொருள் சிறப்புப் பொருளாதார மண்டலம், முடக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் விடியல் கிடைக்கவில்லை. கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
செங்கல்-ஓடு-மண்பாண்ட தொழில்கள்
தென் மாவட்டங்களில் உள்ள செங்கல், ஓடு, மண்பாண்டங்கள் உற்பத்தி, சில லட்சம் தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு அரசு நியாயமற்ற நிபந்த னைகளை விதித்ததால் களிமண் எடுக்க அனு மதிப்படவில்லை. இதனால் இந்தத் தொழில்கள் முடங்கியுள்ளது. செங்கல் மற்றும் ஓடு உற்பத்தி யாளர்கள் களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்வோர் களி மண் எடுக்க உத்தரவு வழங்கும் அதி காரத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிப்பதன் மூலம் இந்தத் தொழிலை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்.
தாது மணல் தொழிலாளர்கள் தவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரைகளில் தாது மணல் எடுக்கும் தொழிலில் பணியாற்றி வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்அதிமுக அரசு, ஒன்றிய அரசு விதித்த தடை களால் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
கூடங்குளம் பிரச்சனை
ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களுக்கு, உள்ளூர் மற்றும் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களை வேலைக்கு சேர்ப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
அதானியால் பருப்பு இறக்குமதி பாதிப்பு
குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் வழியாக பருப்பை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனு மதியளித்ததன் விளைவாக, ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகம் வழியாக நடைபெற்று வந்த பருப்பு இறக்குமதி நடைபெறவில்லை. இதனால் 1,000-க்கும் மேற்பட்ட மாவு ஆலைகள் முடங்கிவிட்டன. இதனால், இந்த மாவு ஆலைகளில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஒரு லட்சம் லாரி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். லாரி உரிமையாளர்கள், லாரிகள் வாங்கிய கடனை கூட கட்ட முடியாமல் துயரத்தில் சிக்கியுள்ளனர்.
பட்டாசு-தீப்பெட்டி உற்பத்தி
தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலை கள், பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை அளித்ததோடு மட்டுமல்லாமல்; பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் நாட்டின் தேவையை 95 சதவீதம் இந்த இரு மாவட்டங்கள் பூர்த்தி செய்து வந்தன. வரலாறு காணாத மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சனைகளால் பட்டாசு உற்பத்தி “நிச்சயமற்ற” நிலையில் உள்ளது. தமிழகத்தில் பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியை முடக்கி இந்தத் தொழில்களை அழிக்கும் நோக்கு டன் குஜராத்தைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் சீனாவிலிருந்து தீப்பெட்டிகள் மற்றும் பட்டாசுகளை இறக்குமதி செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மோட்டார் உற்பத்தி
கோயம்புத்தூர் நகரின் மோட்டார் பம்ப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒன்றிய அரசின் கொள்கைகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரு கின்றன. பருத்தியைப் பதுக்கி அதன் விலையை உயர்த்தியதால் கோவை மண்டலம் முழுவதிலும் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
நலிவடையும் முந்திரித் தொழில்
விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங் களில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான மானியத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ததால், முந்திரித் தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது.
சாதி-வகுப்புவாத மோதல் அபாயம்
தென் மாவட்டங்களில் சாதி மற்றும் வகுப்புவாத மோதல்களை உருவாக்க ஒருசில அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் கூடுதல் நேரம் செலவழிக்கின்றன. இந்தத் தீவிரமான பிரச்சனைகளை கணக்கில் கொண்டு மூடப்பட்ட தொழில்கள் குறித்து ஆய்வு நடத்தவும், இத்தொழில்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க செயலர் அளவிலான அதிகாரி தலைமை யில் ஒரு குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிய மிக்க வேண்டும் என, சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்துள்ள மனுவில் மேற்கண்ட பிரச்சனைகளை விவரித்துள்ளார்.