states

img

வால்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

பொள்ளாச்சி, மார்ச் 30- வால்பாறை நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடை களுக்கு அதிகாரிகள் செவ்வாயன்று சீல் வைத்தனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வாடகை கடை, குத்தகை கடை, இட வாடகை கடைகள் என 350  கடைகள் உள்ளன. இதில், சில கடைகள் கடந்த பல வருடங் களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது. கடந்த ஆட்சியின் போது வாடகை உயர்வு, 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு என 2016 முதல் வாடகை பாக்கி என ரூ.5.5 கோடி பாக்கி இருந்தது.  இந்நிலையில், படிப்படியாக கடந்த சில மாதங்களாக நிலு வையில் உள்ள தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களில் தீவிரமாக வசூல் பணி நடைபெற்றது. இதில், மொத் தம் ரூ.3.56 கோடி தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும், வாடகை செலுத்தாதவர்கள் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், வாடகை நிலுவை வைத்த 32 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள், வால்பாறை காவல் துணை கண் காணிப்பாளர் தலைமையில் சீல் வைத்தனர்.