states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மோடி அரசு கவிழும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உறுதி

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்த லில் “இந்தியா” கூட்டணி கட்சி களின் அபார எழுச்சியால் பாஜக பெரும்  பான்மை இழந்தது. இருப்பினும் தேசிய  ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தய வால் மோடி மூன்றாவது முறையாக பிர தமர் ஆனார்.  இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்த லுக்குப் பிறகு மோடி அரசு கவிழும்  என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறி யுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்  கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “மகா ராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அம்மாநி லத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்  டிற்கும் மிக முக்கியமானதாக உள்ளது.  காரணம் மகாராஷ்டிரா தேர்தல்  முடிவு கள் அம்மாநிலத்தில் மட்டுமல்ல, நாட்டின்  அரசியலை மாற்றியமைக்கும். தேர்தல்  முடிவுக்கு பிறகு, மோடி தலைமையிலான  ஒன்றிய அரசு உறுதியாக கவிழ்ந்து விடும்” என அவர் கூறினார். 

சபரிமலை தரிசன நேரம் நீட்டிப்பு

சபரிமலை கோயிலில் தரிசனம்  3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள் ளது. மதியம் 1 மணிக்கு முடிவடை யும் நேரம் மாலை 3 மணி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு திறக்  கப்படும். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டலமாதம் துவங்கியதையடுத்து, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மாத பூஜையின் போது இவ்வளவு கூட்  டம் இருப்பது இதுவே முதல் முறை. 18ஆம் படி ஏற காத்திருக்கும் பக்தர் களுக்கு சுக்கு தண்ணீர் வழங்க பெரிய  நடைபாதையில் தேவசம் போர்டு ஏற்பாடு  செய்துள்ளது.

தமிழக ஆளுநர்  விரைவில் மாற்றம்?

சென்னை,அக்.20- தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவர் பதவியேற்றது முதல் ஆளும் அரசுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மக்க ளின் உணர்வுகளுக்கு மாறாகவும் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு அனைத்து கட்சிகள் மற்றும் மக்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளு நராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ள தாக கூறப்படுகிறது. தமிழக மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் என  பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அருகே ஏரியில்  மூழ்கி 3 பேர் பலி

சேலம், அக்.20- மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி, வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சிவலிங்கம் என்பவரின் மகள் சிவருந்தினி (ரேவதி) (20), மகன் சிவஸ்ரீ (10). அதேபகுதியைச் சேர்ந்த  முனுசாமி என்பவரின் மகள் ஜீவதர்ஷினி (எ) திவ்யதர்ஷினி (14).  இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் ஞாயிறன்று காலை துணி துவைக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். 3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர், பல மணி நேரம் தேடி 3 பேரின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி காவல் துறையினர் அவர்களது உடல் களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.