சென்னை, மார்ச் 28- அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 விழுக்காடு திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 86 விழுக்காடு திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை கள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து செவ்வாயன்று (மார்ச் 28) நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். அப்போது, “வெள்ள தடுப்பு பணிகள் திட்டம் ரூ.1,335 கோடி, முதல்வர் கிராம சாலைத் திட்டம் ரூ,4,000 கோடி,பேராசிரியர் அன்பழ கன் கல்வி திட்டம் ரூ,7,000 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். மேலும், ஏழு ஆண்டு களுக்கு பிறகு தற்போதுதான் வருவாய் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் செயல்திறனை காட்டுகிறது” என்றும் அவர் கூறினார்.
86 விழுக்காடு நிறைவேற்றம்
கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதி யின் கீழ் மட்டுமே ரூ. 3,27, 157 கோடி மதிப்பி லான 1704 அறிவிப்புகளை வெளியிடப் பட்டது. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. மேலும் ரூ. 87,405 கோடியில் 27 விழுக்காடு திட்டங்களை மட்டும்தான் செயல்படுத்தினார்கள். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரை அறிவிப்புகள் 78, முதலமைச்சர் 161 அறிவிப்பு களைத் தனியாகவும், இதர அறிவிப்புகளாக 46 என அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டதோடு, 110 விதியின் கீழ் 67 அறிவிப்புகளையும், மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் சென்ற போது 88 அறிவிப்பு களும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் 338 அறிவிப்புகளையும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 330 அறிவிப்புகள் என மொத்தம் 3,537 திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. இதில் 3038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதா வது 86 விழுக்காடு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங்களுக்கு அரசாணை வெளி யிடப்பட்டு 39 திட்டங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளது. மேலும் 24 திட்டங்கள் செயல் பாட்டில் உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.