மயிலாடுதுறை, மே 8- தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிர வேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப் படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சி யர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக் கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல் வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பட்டினப் பிரவேச நிகழ் வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயி லாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் முயன்றன. சில ஆதீனம் மற்றும் ஜீயர்களை தமிழக அரசுக்கு எதிராக பேசவைத்தனர். அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் சாலையில் நடமாட முடி யாது என்று மன்னார்குடி ஜீயர் மிரட்டல் விடுத்தார். ஜீயரின் மிரட்டல் பேச்சை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டித்த னர். அவரை கைது செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தினர். “தருமபுரம் விவகாரம் குறித்து ஆதீனங்களு டன் பேசி அரசு சுமூக தீர்வு காணும்” என்று சட்டமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இதனிடையே தருமபுரம் ஆதீனம் மே 8 ஞாயிறன்று மயிலாடுதுறையில் செய்தியாளர் களிடம் பேசுகையில், பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி யாக அனுமதி வழங்கியதாகவும், விருப்பப் பட்டுத்தான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக் கின்றனர் என்றும் கூறினார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக மயிலாடுதுறை வரு வாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.