states

ராகுலின் நடைபயணத்தால் பாஜக ஆட்டம் கண்டு விட்டது : கே.எஸ்.அழகிரி

சென்னை,செப்.13- ராகுலின் 100 கி.மீட்டர் நடைபயணத்தி லேயே பாஜக ஆட்சி ஆட்டம் கண்டுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து  கொள்ள வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்புபவர்கள் காந்தியை படுகொலை செய்தவர்கள். நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள். சுதந்திரத்திற்கு பிறகு 52 ஆண்டுகளாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் தான் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். எம்.எம். கல்புர்கி, பன்சாரே, கவுரி  லங்கேஷ் கொலைகளில் தொடர்புடைய வர்கள் தான் இந்த கேள்வியை கேட்கிறார் கள். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்று படுத்துகிறது. மக்களோடு மக்களாக பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார்.  பாஜகவுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. ராகுல் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் கூற  தயாராக இல்லாத பாஜக திசைதிருப்புகிற அரசியலை செய்கிறது. ஆனால், அதில் பாஜக வெற்றி பெற முடியாது. இது வெற்றி யின் தொடக்கமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;