ஒன்றிய அரசின் கொள்கையினால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக தமிழகத்தின் வியாழனன்று (செப் 14) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனையொட்டி கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.