தூத்துக்குடி, செப்.3- தூத்துக்குடியில் சங்ககால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம் காணுவ தற்கான கடல்சார் முன்கள ஆய்வு பணியை அமைச்சர் தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லி யல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீன வர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத் துவாரத்துக்கு எதிரில் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளத் திடமிடப்பட்டது. முதற்கட்டமாக சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தைக் கண்டறிய கடல்சார் ஆய்வு மேற்கொள்ள இந்தியக் கடலாய்வுப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கட லாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாகமான கொற்கை தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றிற்கு வடக்கே மூன்று கி.மீ தொலை விலும், தற்போதைய கடற்கரையில் இருந்து எட்டு கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொற்கை துறைமுகத்தின் தொன்மை யைக் கண்டறிய அறிவியல் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு கடல் மேற்பரப் பாய்வு கொள்ளப்படுகிறது. இதில் கிடைக் கும் தரவுகளின் அடிப்படையில் எதிர் காலத்திட்டம் வடிவமைக்கப்படும். இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் தூத்துக்குடிக்கும், திருச்செந் தூருக்கும் இடையே ஆய்வு நடைபெறு கிறது என்றார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கி.செந் தில்ராஜ், தொல்லியல் துறை இயக்குநர் சிவா னந்தன், தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கா.ராஜன், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பேரா சிரியர் சிவகொழுந்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.