சென்னை, ஜூலை 12 - ஆசிரியர் தேர்வு வாரிய தலை வர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணித் தேர்வு செய்ய ஆசி ரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2021 டிசம்வர் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2022 மார்ச் 8 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்க ளின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங் களை 2022 மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை யில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரஙகள சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத் திற்கு 2 பேர் என்ற விகிதாச் சாரப்படி சான்றிதழ் சரிபார்ப் பிற்கான பட்டியல் தயார் செய்யப் பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும் இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபணைகள் மீதும் ஆணைகள் பிறப்பிக்கப்பட் டுள்ளன. தற்பொழுது முதல் கட்ட மாக டெக்ஸ்டைல் டெக்னா லஜி, புரொடக்ஷன் இன்ஜினி யரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங் களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலைக்கு விண்ணப்பம் செய்த வர்களுக்கு ஜூலை 16 ஆம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மற்றப் பாடங்க ளுக்கு 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும். நேரடியாக அனுப்பப்படாது. அழைப்பு கடிதத்தினை 14 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.