states

மாணவிகளின் பாதுகாப்புக்காக கல்லூரிகள் முன்பு காவல்துறையினரை நிறுத்தலாம்

மதுரை,நவ.11- தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக மகளிர் கல்லூரிகள் முன்பு காவல்துறையினரை நிறுத்த லாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.  மதுரையில் மகளிர் கல்லூரிகள் முன்பு மதுபோதையில் கும்பல் ஒன்று சிலரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட  சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதி மன்றம் இதனை தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த விக்டோரியா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் சில நாட்களுக்கு முன்பு அரசு மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி  முன்பு மாணவி ஒருவரின் தந்தையை ஒரு நபர் கடுமையாக தாக்கினார். இதை பார்த்து மாணவிகள் பயந்து கல்லூரிக்குள் ஓடினர். மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி யிலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அத்துமீறி நுழைந்து மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங் களில் வைரலாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தின. இதுபோன்ற சம்பவங்களால் மகளிர் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் 8 மாநி லங்களில் அமலில் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாசலில் மாணவிகள் பாதுகாப்பு பணி க்கு காவல்துறையினரை  நியமிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது.  “மதுரையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் வேறு வேறு நாட்களில்  நிகழ்ந்தவை. இவ்விரு சம்பவம் தொடர் பாக 15-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முன்பு காவல்துறையினர்  பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் “ என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.  நீதிபதிகள் கூறுகையில் , “மாணவிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மாணவிகள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பிற பாதுகாப்பு பணியின் போது 10 அடிக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவது போல், மகளிர் கல்லூரிகளில் மாணவிகள் பாது காப்புக்கும் காவலர்களை நிறுத்த லாம்.  தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து உள்துறை செய லாளர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என்று  உத்தரவிட்டனர்.