states

சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றி தனது உயிரை விட்டவரின் மனைவி ஆட்சியரிடம் மனு

மதுரை, ஜூன் 5-   மதுரையில் கண்மாயில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்து உயிரிழந்தவரின் மனைவி அரசு வேலை வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.  மே 29-ஆம் தேதி  கருப்பாயூரணி பகு தியில் உள்ள குளத்தில் குளித்து  கொண்டிருந்த சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதை அப்பகுதி வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துக்குமார்  பார்த்துள்ளார். உடனடியாக அவர் சிறுவர்களை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்துள்ளார். இதில் சிறுவர்கள்  காப்பாற்றப்பட்ட நிலை யில் முத்துக்குமார் நீரில் மூழ்கி உயிரி ழந்தார்.  முத்துக்குமாருக்கு  செல்லத்தாய் என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது இந்த நிலை யில் செல்லத்தாய் தனது நான்கு வயது ஆண் குழந்தை, இரண்டு வயது பெண்குழந்தையுடன் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவில், “எனது கணவர் முத்துக்குமார் சம்ப வத்தன்று விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த எங்களை அழைத்து வர மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது தான் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களைக் காப்பாற்றியுள்ளார். இதில் எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனது குடும்பம் வறுமை நிலையில் உள்ள தால் அரசு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.