குடியுரிமை பெற அரசுக்கு பரிந்துரை செய்க! இலங்கை தமிழர்கள் சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் மனு
மதுரை, அக்.23- மதுரை மாவட்டம், ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 33 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த வெள்ளியன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது “படித்த தங்களது பிள்ளைகள் வேலை வாய்ப்பின்றி சொற்ப வருமானத்தில் அல்லல்படுகின்றனர். மூன்று தலைமுறை அகதிகளாக அவதிப்படுகிறோம். மருத்துவ படிப்பு கானல் நீராகிப்போனது. அகதி என்ற போர்வையில் வாடும் எங்களுக்கு குடியுரிமை மட்டுமே நிரந்தர தீர்வு. எனவே குடியுரிமை கோரும் எங்களது வேண்டுகோளை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்று தங்களுடைய கோரிக்கை மனுவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தெற்கு வாசல் பகுதிக்குழு செயலாளர் போனிபேஸ் மற்றும் முகாம் நபர்கள் உடனிருந்தனர்.
ராஜீவ்காந்தி நினைவாக தொடங்கப்பட்ட இரு அறக்கட்டளையின் உரிமங்கள் ரத்து
புதுதில்லி, அக்.23- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறு வனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளில் சட்டவிதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி அறக்கட்டளை 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை உடல்நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு உள்ளிட்டவற்றில் 2009-ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி , மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே மற்றும் அசோக் கங்குலி ஆகியோர் உள்ளனர். ராஜீவ்காந்தி தொண்டு நிறுவனம் 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாட்டின் பின்தங்கிய மக்களின், குறிப்பாக கிராமப்புற ஏழைகளின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்களாக ராகுல் காந்தி, அசோக் கங்குலி, பன்சி மேத்தா மற்றும் தீப் ஜோஷி ஆகியோர் உள்ளனர். பிரதமர் நிவாரண நிதி ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும். மோசடிப் பேர்வழி தொழிலதிபர் மெகுல் சோக்சியிடம் இருந்து நிதி பெற்றதாகவும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறி யிருந்த நிலையில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரா. முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை, அக். 23- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு (72) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசனுக்கு, கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது. அவருக்கு மருத்துவப் பரிசோ தனை செய்ததில், கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர்பொது மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டொரு நாள் மருத்துவமனை யில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி அவரது உடல்நிலை சீராகவும், இயல்பாக வும் இருக்கிறது என்று அவர் கூறி யுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,அக். 23- கிழக்கு மத்திய வங்கக்கடல் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகி உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள தாகவும், தமிழகம் முழு வதும் பரவலாக திங்களன்று (அக்.24) இடி யுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட் டது. இதனால் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு ள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவும் மழை கொட்டி தீர்த்தது. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறை முகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்ச ரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன வர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி,அக். 23 தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி யில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. அது வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் திங்களன்று புயலாக வலுப் பெறக்கூடும் என்றும், வருகிற 25-ந் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சனியன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தூத்துக்குடி வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட மீன் வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
போலீசாரால் சித்ரவதைக்கு ஆளானவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை,அக்.23- பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளா க்கப்பட்டவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து திருப்பூர் சென்றுள்ளார். பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்தி ருந்த அவரை, பெருமாநல்லூர் காவல் நிலை யத்தின் அப்போதைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் திருட்டு வழக்கு தொடர் பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் அழைத்து சென்று துன்பு றுத்தியதாக, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் முருகன் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருடப்பட்ட நகைகள் எங்கே என கேட்டு, காவல் நிலையத்தில் வைத்து என்னை போலீஸார் தாக்கினர். தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள எனது வீட்டு க்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் எனது மனைவி மற்றும் சகோத ரியை தகாத வார்த்தைகளில் பேசி வீட்டை யும் சூறையாடினர். சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முருகன் கூறியிருந்தார். இந்த புகாரை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் விசாரணை செய்து வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் பிறப்பித்த உத்தரவில், தவறான குற்றச் சாட்டில் முருகனை கைது செய்து துன்புறுத் தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி யுள்ளது. அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக 8 வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை பெருமாநல்லூர் அப்போதைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரிடம் இருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் வசூலிக்க அரசுக்கு பரிந்து ரைக்கிறேன் என்று உத்தரவில் அவர் கூறி யுள்ளார்..
மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் உடல் உறுப்புகள் தானம்
ஓசூர், அக். 23- ஓசூர் காவேரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயம் நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை பெங்க ளூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவ மனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 20ஆம் தேதி பணியின் போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜோலார்பேட்டை ரயில்வே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் காவேரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை (அக். 22) உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்பு களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். காவேரி மருத்துவமனை குழுவினர் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் இணைந்து மூளைச் சாவு அடைந்த பிரபாகரனின் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கண்கள், கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். பின்னர் இந்த உறுப்புகள் சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களில் ள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை முதலில் ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள கேஎம்ஜிஎச்க்கு சிறுநீரக மும், பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கண்களும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அடுத்தடுத்து கொண்டு செல்லப்பட்டது. ரயில்வே ஊழியரின் உடலில் இருந்து தானமாக வழங்கப் பட்ட உடல் உறுப்புகள் 7 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மணலியில் 5 இடங்களில் உயர்கோபுரமின் விளக்கு
திருவொற்றியூர், அக். 23- மணலி மண்டலத்தில் ரூ. 25 லட்சம் செலவில் மஞ்சம்பாக்கம், மாத்தூர், பெரிய தோப்பு, ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெரு ஆகிய 5 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மஞ்சம்பாக்கத்தில் கவுன்சிலர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் உயர்மின் கோபுர மின் விளக்கை இயக்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாத்தூர் பெரிய தோப்பு மற்றும் ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் தீர்த்தி, மணலி மண்டல மின்விளக்கு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.