சென்னை, ஏப். 12 - 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர், முதலமைச்சர் தனி பிரிவு, போக்குவரத்து ஆணை யாளர், ஆகியோரிடத்தில், சம்மேளன தலைவர் வி. குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, பொருளாளர் ஏ.எல். மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் வி.ஜெய கோபால் (வடசென்னை), இ.உமா பதி (தென்சென்னை) ஆகியோர் மனு அளித்தனர். அதன் சுருக்கம் வருமாறு: ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்தச் சட்டம் தமிழகத்தில் அமலானால் ஆட்டோ தொழிலாளர்கள உள்ளிட்டு பயிற்சி பள்ளி, உதிரி பாக கடை வைத்திருபோர், டிங்கர், பெயிண்டர், லைனர், டாப் அடிப்பவர் என 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பறிபோகும். மாநில உரிமைகளை பறிப்ப தால், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, எப்.சி. எடுக்க ஒரு நாள் தாமதமானால் 50 ரூபாயும், ஓராண்டு தாமதம் என்றால் 18 ஆயிரத்து 250 ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். புகை பரிசோதனை செய்யா விடில் 200 ரூபாயாக இருந்த அபராதம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு விபத்திற்கு கூட அபராதம், ஓட்டுனர் உரிமம் பறிப்பு, வாகன பறிப்பு, சிறைத் தண்டனை என ஒரு தவறுக்கு 4 விதமான தண்டனை முறைகள் விதிக்கப்படுகிறது. எப்.சி.கட்டணம் 4300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 ஆண்டு களுக்கு மேற்பட்ட வண்டிகளுக்கு எப்சி எடுக்க 600 ரூபாயாக இருந்த கட்டணம் 6 ஆயிரம் (10 மடங்கு) ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்க ளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம், 3 மாதம் சிறைதண்டனை, அதிகாரிகள் உத்தரவை மீறினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம், வாகனத்தில் ஆவணங்கள் இல்லையென்றால் பல ஆயிரம் அபராதம், பர்மிட் இல்லை யென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஓராண்டு சிறை என உள்ளது. தவறை திருத்துவதற்கு பதில் மோட்டார் வாகன திருத்தச்சட்டம், வழிப்பறி நடத்தும் வகையில் உள்ளது. ‘நீட்’ தேரவை போன்றே ஒன்றிய அரசின் இந்தச்சட்டம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்i உருவாக்குகிறது. எனவே, முதலமைச்சர் இந்த சட்டத்தை நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி ஏப்.18 அன்று தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்பதையும் கவனப்படுத்துகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.