states

தீக்கதிர் விரைவு செய்திகள்

போபால் விஷவாயு: கோடி கூடுதல் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

போபால், மார்ச் 14 - 1984-இல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு சொந்தமான பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு விபத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் கொடூரமாக செத்து மடிந்தனர். இதில், பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றம் ரூ. 750 கோடி  இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஒன்றிய அரசு கூடுதலாக ரூ. 7,400 கோடி இழப்பீடு கேட்டு, உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் ஒன்றிய அரசின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

தமிழிசைக்கு எதிரான மனு மீது மார்ச் 20-இல் விசாரணை!

தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப் பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளு நர் தமிழிசை சவுந்தர்ராஜன் காலம் தாழ்த்தி வருவதாகவும், அவர் விரைந்து ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரியும், தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த ரிட் மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெலுங்கானா அரசின் மனுவை மார்ச் 20 அன்று விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது 2019-ஆம் ஆண்டே நிறுத்தம்!

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ஆம்  ஆண்டிலேயே நிறுத்தி விட்டதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2000  ரூபாய் நோட்டுக்களே போதுமானது என மதிப்பிட்டுள்ளதாக வும், புதிய 2000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்  போது இல்லை என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்  விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

அதானி பற்றி பேசினாலே மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன...

“மோடிஜியின் கீழ் சட்ட விதிகளோ, ஜனநாயகமோ இல்லை. சர்வாதிகாரம் போன்று அவர்கள் நாட்டை நடத்திக்  கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசி வருகின்றனர். அதானி விவகாரத்தில் நாடாளு மன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என நாங்கள்  கோரி வருகிறோம். நாங்கள் இந்த விவகாரம் பற்றி அவை யில் எழுப்பும் போதெல்லாம், மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. அவையில் அமளி தொடங்கி விடுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர் சித்துள்ளார்.

போச்சம்பள்ளி அருகே யானை தாக்கியதில் இளைஞர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 14- போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரூர்  மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்நிலையில், பாரூர் அருகே காட்டுக் கொல்லை கிராமத்தை சேர்ந்த   ராம்குமார்(27) செவ்வாயன்று (மார்ச் 14) மோட்டுப்பட்டி அருகே உள்ள மலை யடிவாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது மலையடிவாரப் பகுதியில் சுற்றித் திரிந்த 2 காட்டு யானை களைப் பார்த்த ராம்குமார், அதனை  தனது செல்போனில் செல்பி எடுக்க  முயன்றுள்ளார். அப்போது, யானைகள் தாக்கியதில் படுகாயமடைந்த ராம் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், பாரூர் காவல்துறையினர் ராம்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற் காக போச்சம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு:  அரசு தகவல்

சென்னை, மார்ச் 14- சட்ட விரோதமாக மணல் அள்ளு வதைத் தடுக்கும் வகையில் தொடர்  கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்  ஒருவர்  தாக்கல் செய்த பொதுநல  மனுவில், ‘வேலூரில் உள்ள பெரு முகை ஊராட்சியின் அரும்பருத்தி பகுதியில், பாலாற்றில் விதி முறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1 மீட்டர் ஆழத்தையும் தாண்டி, அதிகமாக மணல் எடுப்பதால், இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம்  பாதிக்கப்படுகிறது. இந்த விதி மீறல்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி  அளவுக்கு அதிகமாக மணல் அள் ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசா ரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும்  நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர்  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறி ஞர், “மணல் குவாரிகளில் மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த அரசாணை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வரு கிறது. குவாரிகளில் சட்ட விரோத மாக மணல் அள்ளுவதைத் தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று  கொண்ட நீதிபதிகள், இந்த விவகா ரம் தொடர்பாக அறிக்கையையும், மணல் அள்ளுவது தொடர்பாக  நிபந்தனைகள் விதித்து பிறப்பிக் கப்பட்டுள்ள அரசாணையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசா ரணையை மார்ச் 20க்கு தள்ளி வைத்தனர்.