மதுரை, பிப்.3- மதுரை மேலவளவு பஞ்சாயத்து தலை வர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன் கூட்டிய விடுதலை யை ரத்து செய்ய கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் சாதி ஆதிக்கச்சக்தியினரால் படு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண் டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் கொலையானவர்களின் மனைவி மற்றும் தாய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.இந்த வழக்கில் பிப்ரவரி 3 வெள்ளியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், 13 பேரின் முன் கூட்டிய விடுதலை குறித்த அரசாணையை பிறப்பிப்ப தற்கு முன் அனைத்துத் தரப்பு சூழலையும் பரிசீலனை செய்த பிறகே, தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. எனவே இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறி நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.