states

மதுரை முக்கிய செய்திகள்

அறுவடைக்குத் தயாராக உள்ள பன்னீர் திராட்சை 

சின்னாளபட்டி, மார்ச் 7- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை அடுத்த சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, செட்டிய பட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி, பூசா ரிப்பட்டி, ஜாதிகவுண்டன்டன்படி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நாட்டு பன்னீர் திராட்சை  சாகுபடி செய்யப்படுகிறது.  120-நாட்களில் மகசூல்  தரக்கூடிய இப்பகுதி நாட்டுத்திராட்சைக்கு தனித்துவமான சுவை உண்டு.  தற்போது இப் பகுதியிலுள்ள பல்வேறு  தோட்டங்களில் கொத்து கொத்தாக விளைந்து அறு வடைக்கு தயாராக உள்ளது.   இது குறித்து விவசாயி அந்தோணிசாமி கூறுகை யில், “ இந்தாண்டு பெய்த கூடுதல் மழை மற்றும் பனிப்  பொழிவைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிக ரித்துள்ள வெயிலின் காரணமாக இப்பகுதியில் விளைந்துள்ள பன்னீர் திராட்சைக்கு வழக்கத்தைவிட கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை கொடுத்து வியாபாரிகள் வந்து அறுவடை செய்துகொள்கின்றனர். பலத்த காற்று மற்றும் கோடைமழை பெய்யாமலிருந்தால் மேலும் விலை  அதிகரிக்கும்.  இந்தாண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்  யப்பட்டுள்ளது. விளைச்சலும் அதிகரித்துள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட  மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர்” என்றார். 

நடத்துநர் தற்கொலை

இராஜபாளையம், மார்ச் 7-  இராஜபாளையம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (53). இவர்  அரசுப் போக்குவரத்து கழ கத்தில் சாத்தூர் பணிமனையில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வாகன விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்த தாகவும் அதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  தென்னை மரத்து மாத்திரையை தின்று மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக உறவி னர்கள் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராசு (48)  விசைத்தறி தொழிலாளி யாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஆப்பனூர் செல்லும் வழியில் உள்ள முருகன் கோவில் அருகே  பந்தல் கம்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மார்ச் 8 முதல் மதுரை வழியாக  ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

மதுரை, மார்ச் 7- மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலை யங்களில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்க ளாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக சில ரயில்கள் முழு மையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. புதிய மின்மயமாக்கல் ஏற்பாடு கள், புதிய ரயில் பாதை இணைப்புகள், புதிய சைகை மின்னணு கைகாட்டி விளக்குகள், காலி ரயில் பெட்டி தொடர்களை ரயில் நிலையத்திலிருந்து எடுத்து செல்ல தனி பாதை அமைப்புகள், ‌ ரயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரயில் பாதை, புதிய நடைமேடை, நடை மேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.  இந்தப் பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 7)  நிறைவு பெற்று விட்டன. எனவே மார்ச் 8 புதன் கிழமை முதல் மதுரை  வழியாக அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும். மதுரை  ரயில் நிலையத்தில் சராசரியாக 65 பயணிகள் ரயில்கள், 10 சரக்கு ரயில்கள் கையாளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ரயில்  பாதை இணைப்பு பணிகளால், மதுரை ரயில் நிலையத்தில் கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் மூலம் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படும். இதற்காக 75 சென்டிமீட்டர் அகல கணிப்பொறி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ரயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல்கள், ரயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. கணிப்பொறி “மௌஸ்” மூலம் நிலைய அதி காரி ரயில்களை இயக்க பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல்  விளக்குகளை ஒளிரச் செய்வது போன்ற பணிகளை எளிதாக செய்யலாம். எந்தெந்த ரயில் பாதைகளில் ரயில்கள் இருக்கின்றன  என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். தெற்கு ரயில்வே யில் மதுரை ரயில் நிலையத்தில் அதிக அளவில் 385 ரயில் பாதை கள், 88 ரயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்பு கள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் மதுரை  ரயில் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டிலேயே அறி முகப்படுத்தப்பட்டது. பின்பு 2019 ஆம் ஆண்டு தேனி அகல ரயில் பாதை துவக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இணைப்பு பணிகளில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நிலைய அதிகாரிகள் நம்பிக்கையான, விரைவான முடிவுகள் எடுத்து ரயில்களை தாமதம் இல்லாமல் பாதுகாப்புடன் இயக்க முடியும். திருப்பரங்குன்றம் மற்றும் திரு மங்கலம் ரயில் நிலையத்திலும் ரயில்களை பாதுகாப்பாக இயக்கு வதற்கு புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி - திருநெல்வேலி பிரிவு மற்றும் செங்கோட்டை - புனலூர் பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.