states

ஊராட்சி செயலர்கள் சட்டத் திருத்தம்: திரும்பப் பெற கோரிக்கை

சென்னை, ஜூன் 21-. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி கிராம ஊராட்சி செயலரை நியமித்தல்,  பணியிடமாற்றம் செய்தல் மற்றும் நிர்வகித்தல்  அகியவை ஊராட்சிகளின் செயல் அதிகாரியாக இருக்கும் கிராம ஊராட்சித்தலைவரின் பொறுப்பாக இருந்தது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவரின் இந்த அதிகாரங்களைப் பறித்து, படிப்படியாக  அதனை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளிடம் ஒப்படைக்கும் பணியை மாறி மாறி பெறுப்பில் இருக்கும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல், ஊராட்சிகள் நேரடியாக மேற்கொண்டு வந்த ஊராட்சி செயலர்களின் நியமனங்கள், 2013 ஆம் ஆண்டு தமிழக கொண்டு வந்த அரசாணை 72யின் படி மாவட்ட அளவிலான நியமனக்குழு மூலம் நடைபெறத் துவங்கின. இருப்பினும், நிர்வாக ரீதியாக ஊராட்சி செயலர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களிடம் இருந்தது. இந்த நிலையில், ஊராட்சி செயலரை முழுமையாக மாநில அரசின் கட்டப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 104 (இடமாற்றம்) மற்றும் 106 (தண்டிக்கும் அதிகாரம்) ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள

இச் சட்டத்திருத்தங்களின் மூலம், இனி ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும்போது, கிராம ஊராட்சித் தலைவரையோ அல்லது ஊராட்சி மன்றத்தையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரே கிராம ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்வார்.  இதுகுறித்து தன்னாட்சி அமைப்பின் தலைவர் க. சரவணன், பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கிராம ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் பெறும் ஒரு பணியா ளரை, கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட் டில் இருக்க வேண்டிய ஒருவரை அந்த ஊராட்சி யின் நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக  எடுத்து அலுவலர்களின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு சென்றிருப்பது மிகுந்த கண்டனத் திற்குரியது. அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தத்தால் ஊராட்சிமன்ற தலைவருக்கு இணையான அதிகாரமிக்க நபராக, மக்களால் தேர்வு செய்யப்படாத ஊராட்சி செயலர் உருவெ டுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 243 ஜி-இன்படி கிராம  ஊராட்சியின் சுயாட்சித் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, தனி  அலுவலர்கள் காலத்தில் எந்த கண்காணிப்பும் இல்லாமல் ஊராட்சிகளில் ஊழல் அதிகரித்தது என்ற குற்றச்சாட்டகள் உள்ளன.  எனவே, இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், உயரதிகாரிகளுடன் இணைந்து ஊராட்சி செயலர்கள் ஊழலில் திளைக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது. இது மக்கள்  விரோத முயற்சியாகும். எனவே, ஊராட்சிக ளின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.