states

37 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை

சென்னை, ஆக. 23- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் ஜீரோ அட்மிஷன் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  முதல் இரண்டு கட்ட கலந் தாய்வில் ஒரு அட்மிஷன் கூட நடை பெறாத கல்லூரிகளை கண்டு அண்ணா  பல்கலைக்கழகம் அதிர்ச்சி அடைந் துள்ளது. இதற்காக முன்னெடுத்துள்ள அடுத்தகட்ட திட்டங்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி களில் தற்போது கலந்தாய்வு நடை பெற்று வருகிறது. ஜூலை 27 முதல் செப்டம்பர் 2 வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடந்து கொண்டி ருக்கிறது. முதல் இரண்டு சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் சில புள்ளிவிவரங்கள் கலக்கமூட்டும் வகை யில் அமைந்துள்ளன. இதுவரை 37  கல்லூரிகளில் ஜீரோ அட்மிஷன் நடந்து ள்ளது. ஒருவர் கூட விருப்பப்பட்டு மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் எந்த ஒரு படிப்பையும் தேர்வு செய்ய வில்லை. 208 கல்லூரிகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. முதல் இரண்டு ரவுண்டு கலந்தாய்வில் 50,615  மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மொத்த  பொறியியல் கல்லூரிகள் 440 ஆகும். இவற்றில் வெறும் 41 கல்லூரி களில் தான் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், நவீன கற்றல் மையங்கள், தொழில் நிறுவனங்களின் ஒருங்கி ணைப்பு போன்றவை இடம்பெற்றுள் ளன. அந்த வகையில் மேற்சொன்ன 41 பொறியியல் கல்லூரிகளிலும் 80 விழுக்காட்டிற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இந்த கல்லூரி களில் உள்ள முக்கியமான பாடப் பிரிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.

இதுபற்றி கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தால், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இதுதொடர்பான பாடப் பிரிவுகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்திருக்கின்றனர். ஒட்டுமொத்த கலந்தாய்வு முடிந்த பின்னரும் 50 விழுக்காடு இடங்கள் கூட நிரம்பாத பொறியியல் கல்லூரிகள் எப்படி திறம்பட செயல்பட முடியும், மாண வர்களுக்கு எப்படி தரமான கல்வியை அளிப்பார்கள், இது அவர்களின் எதிர் கால சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்ப டுத்தாதா என்ற கேள்வி எழுகிறது. எனவே தரமான கல்லூரிகளை உரு வாக்குவது, அதை தக்க வைப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவது, புதிய படிப்புகளை அறி முகம் செய்வது, தரமற்ற கல்லூரிகளை களையெடுப்பது போன்றவற்றில் அண்ணா பல்கலைக்கழகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வா கத்திற்கும் தெரிந்திருக்கும். எனவே தான் முக்கியமான ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். கலந்தாய்வு முடிந்ததும் எந்தெந்த கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை இருக் கிறதோ, அங்கெல்லாம் நேரடி ஆய்வு  மேற்கொள்ள இருக்கின்றனர். சம்பந்த ப்பட்ட கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன? என்று ஆய்வு செய்வார்கள். ஒருவேளை மோசமான நிலையில் இருந்தால் உரிய நடவடிக்கைகள் பாயும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு குறைவான மாண வர் சேர்க்கையுடன் தர மதிப்பெண் களில் மிகவும் குறைவான மதிப் பெண்களை பெற்ற 87 கல்லூரி களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்கியிருந்தது. அவற்றின் நிலையை நடப்பாண்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதுதவிர மற்ற கல்லூரி களின் நிலையையும் கள ஆய்வு செய்து செயல்பட தகுதியானதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்து கின்றனர்.