சிதம்பரம்,மே 9- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவப் பிரகாசம், (வயது 47) அ.தி.மு.க., பிரமுகர். இவர், ஞாயிறன்ற இரவு அரிய கோஷ்டி யில் இருந்து, சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சிதம்பரம் அருகே முட்லூர் மண்டபம் அருகே சென்ற போது, பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி சிவப்பிரகாசம் கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.