ஒகேனக்கல் குடிநீர் திட்ட பகுதி-2 தொடங்கப்படும்: அமைச்சர்
கிருஷ்ணகிரி, நவ.10- கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில், ரூ.2.16 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள், ரூ.13 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆட்சியர் கே.எம்.சரயு, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 20 ஆயிரம் சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் பகுதியை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஊட்டி, கொடைக்கானலில் தீவிர இ-பாஸ் சோதனை
கொடைக்கானல், நவ.10- உயர்நீதிமன்ற உத்தரவால் ஊட்டி, கொடைக்கானல் வரும் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. ஊடகங்களில் ஊட்டி, கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் என செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, மலைப்பிரதேசங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் பற்றிய உன்மையான கணக்கீடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சனிக்கிழமையன்று கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனையிடப்பட்டன. இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டும் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல், நீலகிரியின் நுழைவாயிலான மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு சோதனைச் சாவடியிலும் ஊட்டி கல்லாறு சோதனைச்சாவடியிலும் இ-பாஸ் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
23 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
இராமேஸ்வரம்,நவ.10- தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை யினர் கைது செய்தனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 ஆயிரம் மீனவர்கள் சனிக் கிழமை கடலுக்குச் சென்ற னர். ஞாயிற்றுக்கிழமை அதி காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர்.இதில் ஜெயராஜ், ராஜா, கீதன் ஆகியோரு க்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை எல்லை தாண்டியதாகக்கூறி இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். விசைப்பட குகளில் இருந்த ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப் உள்ளிட்ட 23 மீனவர்களை கைது செய்த னர். இவர்களை ஊர்காவல் துறை நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான நடிகை கஸ்தூரி
சென்னை, நவ.10- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறானப் பேசிய நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச்செயலாளர் நந்த கோபால், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில், கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சம்மன் அளிக்க சென்னை போயஸ் கார்ட னில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு காவல்துறையினர் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும் செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளார். இதனால் நடிகை கஸ்தூரி தலை மறைவாகிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.