states

மாமல்லபுரம் அருகே ரூ. 20 கோடி நிலம் மீட்பு

மாமல்லபுரம், செப்.24- மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.  நெம்மேலி, பட்டிபுலம், சூலேரிக் காடு, சாலவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இடங்களை தனியார் ஓட்டல் கள், கோவில், வீடு, வீட்டுமனை என  பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இது சம்பந்த மாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதிகள் ஆக்கிர மிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.  இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தர வின் பெயரில், உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல்  அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட  அதிகாரிகள் வருவாய்த்துறையி னர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆக்கிரமிப்பு கட்டிடங் களை ஜே.சி.பி இயந்திரம் மூலம்  இடித்தனர்.இரண்டு நாட்களாக நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு  நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

;