சென்னை, ஏப்.26- சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் முகம்மது ஷாந வாஸ் “உலகப் புகழ்பெற்ற நாகூர் திருத்தலத்தில் குடிதண்ணீர், சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் எதுவும் செய்துகொடுக் கப்பட வில்லை. அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி புதிய சுற்றுலா மையமாக அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தன்,“ தமிழ்நாடு 300 சுற்றுலா தலங்களை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ பெருந் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதால் நிதி நிலைமைக்கு ஏற்ப நாகூர் திருத்தலத்தில் மேம்பாட்டுப் பணிகள் செய்து கொடுக்கப் படும்” என்றார். கொல்லிமலையில் நிறுத்தப்பட்ட படகுசவாரி மீண்டும் துவக்கப்படுமா? சாத்தனூர், முட்டம், ஒகனேக்கல் ஆகிய சுற்றுலா தளங்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் படுமா? பூண்டி நீர் தேக்கம் சுற்றுலா தளமாக அறிவிக்க அரசு முன்வருமா? என்றும் உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் நிதிநிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றார்.