புதுதில்லி, ஜூலை 10- சீனாவிடம் இருந்து பெருமளவில் பாலி யஸ்டரில் ஆன இந்திய தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி யளித்துள்ளது. “உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்து வம் அளித்து காதி பொருட்களைப் பயன் படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், சீனாவில் நவீன இயந்தி ரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்ட ரிலான இந்திய தேசியக் கொடிகளை பெரு மளவில் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தேசியக் கொடிகளைத் தயாரித்து வரும் ஆயிரக்க ணக்கான காதித் தொழிலாளர்கள் பணி இழப்பார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கம் மட் டுமே காதி தேசியக் கொடிகளை உற்பத்தி செய்ய உரிமம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் இறக்குமதி அறிவிப்பால் இந்த தயாரிப்பு மையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. ஒன்றிய அரசின் பாலியஸ்டர் தேசியக் கொடி இறக்குமதிக்கு எதிராக ஜூலை 30-ஆம் தேதி கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கம் “சத்தியாகிரகம்” நடத்து கிறது.
காதித் தொழிலின் பாதுகாவலராக மோடி தன்னைக் காட்டிக் கொள்கிறார், கடந்த ஆண்டு தனது ‘மன் கி பாத்’ உரையில் ‘காதி’ பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது நட வடிக்கைகள் காதி தொழிலை அழிவிற்கு கொண்டு செல்கிறது. “போலி தேசியவாத” பாஜகவுக்கு சுதந்திரப் போராட்டம் மற்றும் அதன் சின்னங் கள் பற்றி எந்தப் புரிதலும் இல்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பார் அஜய் குமார் கூறியுள்ளார். மேலும், இயந்தி ரத்தால் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் கொடி களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் மூலம், பிரதமர் மோடி, ‘காதி’யின் சாராம்சத் தையும், மகாத்மா காந்தியின் பாரம்பரி யத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என்றார். சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்காதவர்கள் மூவர்ணக் கொடியுடன் நாட்டிற்கான உறவைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங் கேற்காதவர்கள், நாக்பூரில் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றாதவர்கள், மூவர்ணக் கொடிக்கும் காதிக்கும் நாட்டிற் கும் உள்ள உறவை எப்படிப் புரிந்துகொள் வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ‘காதி’யை மரணத்திற்குத் தள்ளும் மோடி தன்னை ஒரு ‘பாலியஸ்டர் ஏகபோக வாதி’ என்று தம்மை அறிவித்தாலும் அதில் வியப்பில்லை. பிடிஐ தகவல்களுடன்