சென்னை, ஜூலை 6- தக்காளி விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங் களின் தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் செல் போன் செயலியை அமைச் சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். CO-Op Bazaar என்ற கூட்டுற வுத்துறை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் வியாழனன்று (ஜூலை 6) தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “ இந்த செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது” என்றார். தொடர்ந்து அமைச்சர், தக்காளி விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உள்ளது என்றும் அவர் கூறினார். ரேசன் கடைகளில் தக்காளி குறைந்த விலை யில் விற்பனை செய்யப்படு வதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக் கைக்கு பிற மாநில மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை தவிர இதர மாநில முதல்வர்கள் தக்காளியை குறைந்த விலையில் விற்பதை கவனம் செலுத்தவில்லை. தக்காளி விலை இன்னும் கூட குறைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறினார். தக்காளி விற்பனை மேலும் பல கடைகளுக்கு விரிவுபடுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஒரே நேரத்தில் எல்லா கடைகளிலும் விற் பனை ஆரம்பித்தால் தக் காளி விற்பனை செய்வது இயலாமல் போய்விடும். தற்போது 3 மாநகராட் சிகளில் குறைந்த விலை யில் தக்காளி விற்கும் திட்டம் மற்ற மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள தால் ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். காய்கறி, மளிகை பொருள் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.