states

கார் வெடிப்பில் பொய்யுரைக்கும் ஊடக அண்ணாமலைகள் - அ.ர.பாபு

அக்டோபர் 23 ஆம்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து முபின் என்ப வர் உயிரிழந்தார். கார் வெடித்த இடத்தில் கிடந்த ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் காவல் துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உட னடியாக டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை யின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து காரில் பயணம் செய்து இறந்தவர் யார், கார் யாருடையது என்கிற விசாரணையை துரிதப்படுத்தி; பத்து நபர்களின் கை மாறி கார் முபினிடம் வந்துள்ளது என்றும், இறந்தவர் முபின் என்பதும் காவல்துறையினர் உறுதி செய்த னர். கார் வெடித்த இடத்தில் கிடந்த சந்தே கத்திற்கிடமான ஆணிகள், பால்ரஸ் குண்டுகள்  எப்படி வந்தது என்பதில் துவங்கியது விசா ரணை. முபினின் வீட்டில் சோதனை மேற்  கொண்டு, அழுத்தம் குறைந்த நாட்டு வெடி  பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களான பொட்டாசியம், சல்பர் போன்ற  பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறை யினர் அறிக்கையாக வெளியிட்டனர். இதனை யடுத்து இறந்து போன முபினின் நண்பர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என சில குறிப்பிட்ட நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தும், அவர்களை உபா சட்டத்  தில் கைது செய்தும் தமிழக போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இதில், கிடைத்த தகவலின்படி வெளி மாநில தொடர்பு, பன்னாட்டு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தமிழக அரசும் இதனை என்ஐஏ விசா ரணைக்கு ஒப்படைத்தது. என்ஐஏ விசாரணை யை துவங்கியுள்ளது.

மேற்கண்ட விபரங்கள் மட்டுமே அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்கள். இது இப்படியிருக்க, கார் சிலிண்டர் வெடித்  தது என ஆரம்பித்து, “கார் குண்டு வெடித்தது; தற்கொலை படை தாக்குதல்; ஓணான் தாக்கு தல்; கோவில்கள் மீது தாக்குதலுக்கான திட்டம்; ஜவுளிக்கடையை குறிவைத்து தாக்க திட்டம்; பொது இடங்களை தகர்க்க திட்டம்” என ஒவ்  வொரு நாளும் விதவிதமான ஊகச் செய்தி களை ஊடகங்கள் வெளியிடுவது, பாஜக  அண்ணாமலையின் அன்றாடப் பொய்களை யே விஞ்சும் அளவிற்கு போட்டிபோட்டு வெளி யிடப்படுகிறது அல்லது வெளியிடுமாறு ஊடக தொழிலாளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.  ஒற்றை ஆளாக அனைத்தையும் தயாரித்து  தாக்குதல் நடத்துவதே ‘ஓணான் தாக்குதல்’.  அப்படியெனில் 6 பேர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்களே. அது எப்படி ஓணான் தாக்கு தல் எனக் கேட்டால் பதில் இல்லை. ‘தற்கொலைப்படை தாக்குதல்’ என்றால் ஒருவர்தானே சிலிண்டர் வெடிப்பில் இறந்தார்;

மற்றவர்கள் ஏன் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றால், அதற்கும் பதில் இல்லை. ஆறு கோவில்களை தகர்க்க சதி என்று  நான்கு தொலைக்காட்சிகள், மூன்று அச்சு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏழு ஊட கங்களும் அடையாளப்படுத்திய கோவில் களின் எண்ணிக்கையும், மீத ஊடகங்கள் நான்கு  கோவில்கள் என பட்டியலிட்ட கோவில்களின் எண்ணிக்கையும் சேர்த்தால் மொத்தம் 60 கோவில்களின் எண்ணிக்கையை கடக்கிறது.  இது போக, ஜவுளிக்கடைகளை தகர்க்கத்  திட்டம் என ஒரு ஊடகம் தனது ‘தனித்துவத்தை’  வெளிப்படுத்தியுள்ளது.  இவையெல்லாம் கைது செய்யப்பட்ட வர்களை விசாரணைக்கு காவல்துறையினர் எடுக்கும் முன்பே ஊடகங்களில் வெளி யிடப்பட்ட செய்திகள். அச்சு ஊடகங்கள் வாந்தி  எடுத்ததை அடுத்த நாள் காட்சி ஊடகங்கள்  கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அதிகம் வாந்தி எடுக்கின்றன. இவை எதற்கும் எந்த வகை யிலும் ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. ‘போலீசார் சொன்னது’ என்கிற ஒற்றை வார்த்தை போதுமானதாக இருக்கிறது இந்தப் பொய்யர்களுக்கு. எந்த போலீஸ் என்று கேட்க  முடியாது; ஏனெனில், அது ‘சோர்ஸ்’ தக வல். ஒரே போலீஸ் ஓவ்வொருவருக்கும் ஒரே  மாதிரியான தகவலை சொல்லாமல், ஆளுக்கு  ஒன்று சொல்லியிருக்கிறாரோ என்ற கேள்வி எழு கிறது.

இதுகுறித்து ஊடக நண்பர்களிடம் அள வளாவினால், “என்ன செய்வது, இப்ப டிக்கொடு என்று அழுத்தம் தருகிறார்கள். அந்த  ஊடகத்தில், வந்துவிட்டது, நீயும் கொஞ்சம் காரம் சேர்த்து கொடு என நிர்ப்பந்திக்கிறார்கள். இல்லாத ஒன்றை எப்படி கொடுப்பது என்  றால், இருக்கும் என்று நினைத்துக் கொடு  என்கிறார்கள். ‘டெஸ்க்கில்’ இருப்பவர் களுக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை. அந்த அழுத்தத்தை எங்கள் மீது திணிக்கி றார்கள்” என்கின்றனர் அப்பாவி ஊடக தொழி லாளர்கள். ஆக மொத்தத்தில், ஊடக நிறு வனத்தினர் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது ஏதே நிர்பந்திற்காகவோ அண்ணா மலைக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது ஆருடம் அற்ற உண்மை. ஊடகத்தின் இந்த அறமற்ற செயல்களால் எது உண்மை, எது பொய் என்பதையறிய முடியாமல் மக்கள் பீதிக்குள்ளாகிறார்கள் என்பதே பேருண்மை.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

 வள்ளுவப்பெருந்தகையின் கூற்றிற்கு “ செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்” என்பது பொருளாகும்.  இந்த நிலையில், கடந்த ஒரு வார காலத்தின் ஊடகச் செய்திகளை கண்டு கொதித்த கோவை மாநகர காவல் ஆணை யர் வி.பாலகிருஷ்ணன், பத்திரிகை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “23 ஆம்தேதி கோவை மாநகரம், உக்கடம், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, மாருதி கார் மற்றும் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமோச முபின் என்பவர் இறந்து போனது சம்பந்தமாக ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கா னது தேசிய புலனாய்வு முகமைக்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள் ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் தங்களது பத்திரிக்கைகளில் புலன் விசாரணை பற்றி  குற்றவாளிகளின் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரி கைகளில் இவ்வழக்கு தொடர்பான செய்தி களை வெளியிடும்போது அது புலன் விசாரணை யைப் பாதிக்காத வகையிலும், வதந்திகளைப் பரப்பாத வகையிலும் செய்திகளை வெளியிடு மாறு” கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். அண்ணாமலையின் பொய்களுக்கு எதி ராக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை  விடுத்துள்ளதும், அறம் மீறும் ஊடகப் பொய்  யர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணை யர் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தி ருப்பதும் இரு வேறு காரணங்கள் அல்ல, ஒன்று தான்: பொய் பேசாதீர்!