சென்னை,மார்ச் 6- வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படு வதாக பீகார் உள்ளிட்ட மாநிலங்க ளில் சமூக வலைதளங்களில் வதந்திபரப்பப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததுடன், தொழி லாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வதந்தி பரப்பு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத் திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “நாடு தழுவிய அளவில், மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியை வலுப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக் கும் திமுக ஆட்சிக்கும், பாஜ கவை கூட்டணியிலிருந்து வெளி யேற்றிய பீகார்முதல்வர் நிதீஸ் குமார் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கத்துடன், வடமாநிலத் தொழிலாளர் தொடர் பாக வதந்திகள் பரப்பப்படு கின்றன. இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்று பட்டு, சமூக விரோத சக்திகளை முறியடிக்க வேண்டும்”என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தியைப் பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதை வரவேற் கிறோம். இது திட்டமிட்ட பயங்கர வாத சதி என்பதால், பின்னணி யிலுள்ள அனைவர் மீதும் பயங் கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, விரட்டி அடிக்கப்படு கிறார்கள் என்று சமூக வலை தளங்களில் தகவல் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறந்த பண்புகளைக் கொண்ட தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார். மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமை தியின்மை, வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சிகளா கும். இதில் தொடர்புடையவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத் தைக் குலைக்க முயற்சிக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று தெரி வித்திருக்கிறார்.