கடந்த 2014இல் பொது ஊழியரும், நுகர்வோர் கல்வி மையத்தின் நிர்வாக அறங் காவலருமான டி.ஜோ.காப்பன் ஊடகக் கட்டுப்பாடுகளைக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகி னார். பின்னர் வழக்கறிஞர்கள், பத்தி ரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதலுக்கு இடையே அதிக மனுக்கள் பெறப்பட்டன. மூன்று நீதி பதிகள் கொண்ட முழு அமர்வு இந்த மனுக்களை பரிசீலித்து, 5 நீதிபதி கள் கொண்ட அமர்விற்குமாற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேரள உயர்நீதி மன்றம், ”பத்திரிக்கை சுதந்திரம் என்பது அரசமைப்பு சாசன உரிமை. அதை கட்டுப்படுத்த முடியாது” என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏ.கே.ஜெய சங்கரன் நம்பியார், கவுசர் எடப்பகத்து, சி.எஸ்.சுதா, முகமது நியாஸ், வி.எம்.ஷியாம்குமார் ஆகி யோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், “பத்திரிக்கை சுதந்திரம் என்பது அர சமைப்பு சாசன உரிமையாக உள் ளது. உண்மையில் அதை கட்டுப் படுத்த முடியாது. ஆனால் ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்வது விரும்பத்தக்கது. நீதிமன்றத்தின் பொறுப்பு பொதுவாக குற்றவியல் வழக்கு களில் அந்த நபர் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றங் களே முடிவு செய்ய வேண்டும். ஒருவரை குற்றவாளியாகவோ, நிர பராதியாகவோ சித்தரிக்கும் செய்தி களை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இருப்பினும் ஊடகங் களில் இருந்து தனி நபர் சுதந்தி ரத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் இருந்தால் நீதி மன்றத்தை அணுகுவதற்கு உரிமை உள்ளது. அரசமைப்பின் 19 (1) ஏ பிரிவு ஊடகங்களுக்கு அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் மற்றவர்களின் உரிமைகளில் தலையிடுவதாக இருக்க கூடாது. விசாரணையில் உள்ள வழக்குகளை ஊட கங்கள் முடிவு செய்தால், அரச மைப்பு சாசனத்தின்படி பத்திரிகை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பொதுமக்க ளுக்கு உண்மையைச் சொல்ல ஊட கங்களின் உரிமை பாதுகாக்கப் பட்டாலும், குற்றம் சாட்டப்பட்ட வருக்கு வெளிப்படையான விசா ரணை கோரும் உரிமை உண்டு. இந்த முக்கிய தீர்ப்புக்கு இசைவுடன் நீதிபதிகள் கவுசர் எடப்பகத்து, முஹம்மது நியாஸ், வி.எம்.ஷியாம்குமார் ஆகியோர் தனித்தனியாக தங்களது தீர்ப்பு ரைகளை எழுதினர். நீதிபதி சி.எஸ். சுதாவும் தீர்ப்பை ஏற்றுக்கொண் டார். செய்தியின் உண்மைத் தன்மை யைக் கண்டறியும் பிற கோரிக்கை களில் கேரள உயர்நீதிமன்றம் தலை யிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.