states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. கலவரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு  கல்வி வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் விரும்பும் பள்ளியில் சேர தமிழ்நாடு அரசு சிறப்பு பரிந்துரை செய்யும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி வித்துள்ளார்.
  2. மக்களவையின் மையப் பகுதியில் சென்று விலை வாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்காக முழக்கங்களை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரி தாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர்  ஓம் பிர்லா அறிவித்துள் ளார்.
  3. முல்லை பெரியாறு அருகே புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகளின் சம்மதம் தேவை என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் பதி லளித்துள்ளது. முல்லை  பெரியாறு அருகே புதிய அணை தொடர்பாக கேரள எம்.பி., ஜான் பிரிட்டாஸ்  மாநிலங்கள வையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
  4. ஆர்டர்லி வைத்திருப்ப தாக தகவலோ, புகாரோ வந்தால் சம்பந்தப்பட்ட காவல் உயரதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.
  5. இந்திய முன்னாள் குடி யரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் வசிக்க தில்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ஆம் எண் கொண்ட பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீதான  நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கை விரைவில் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  7. பனாமாவில் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். மக்களின் கோரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு அரசு செவி சாய்க்கிறதோ, அதைப் பொறுத்தே தங்கள் போராட்ட வடிவம் இருக்கும். கோரிக்கைகளை ஏற்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்களின் சங்கம் அறிவித்திருக்கிறது. விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே போராட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  8. தங்கள் நாட்டின் மீது தன்னிச்சையாகப் போடப்பட்ட தடைகள் உலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டில் போடப்பட்ட அணுசக்தி தொடர்பான உடன்பாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்கா பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
  9. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென்று ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டனர். அடினியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவர்களுக்குப் பட்டம் வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பட்டம் பெறும் மாணவர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அப்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றது.