states

நிலவில் அதிகளவில் சல்பர் உள்ளது

கோவை,அக்.29- நிலவில் அதிகளவில் சல்பர் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தெரிவித்தார். கோவையில்  தனியார் பள்ளி  மாணவ, மாணவிகளுடன் ‘சந்திர யான்-3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘சந்திரயான் 3’ திட்ட த்தின் ஆயுட்காலம் நிறைவடைந்து விட்டது. சூரியஒளி ஆற்றலைக் கொண்டு மட்டுமே செயல்படும் என்ப தால், 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. வரும் ஆண்டுகளில் கடும் குளிர்  நிலவும் சூழலிலும், உள்ளே இருக்கும் இயந்திரங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நிலவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டுதான் நிலவுக்கு மனிதர் களை அனுப்பும் முயற்சியை மேற் கொண்டுள்ளோம். இதற்காக, தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படும். நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கியப் பெருமையை இந்தியா அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில், நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துவருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். சந்திரயான்-3 திட்ட த்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்து ள்ளன. வெப்ப நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலவில் சல்பர் அதிகம் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.